ஓட்டுனர், நடத்துனர் பணிகளுக்கு எழுத்து தேர்வு இல்லை: தனி நீதிபதியின் உத்தரவுக்கு 'டிவிஷன் பெஞ்ச்' தடை போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற 'டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த, கோவைசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த உயர் நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவு: போக்குவரத்து கழகங்களில் உள்ள பணிகளுக்கான கல்வித் தகுதி, 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 என்று இருந்தால், படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு, 'வெயிட்டேஜ்' அளிக்க வேண்டும் அல்லது கல்வி தகுதிக்கு இணையாக எழுத்து தேர்வு நடத்த வேண்டும். பத்தாம் வகுப்புக்கு குறைவாக அல்லது பட்டப் படிப்பு தகுதி என, நிர்ணயிக்கப்பட்டால், கல்வித் தகுதிக்கு இணையாக, எழுத்து தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டது. இந்த