Skip to main content

தேர்ச்சியை அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குநர் உத்தரவு.



சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை

சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை - தலை
மை ஆசிரியர்களுக்கு இயக்குநர் உத்தரவு.
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆண்டுதோறும் 10ம் வகுப்பிலும், 12ம் வகுப்பிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. 100க்கு 100 தேர்ச்சி பல பள்ளிகளிலும் எடுத்து வருகின்றனர். பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் அதிக தேர்ச்சி பெறுகின்றன.ஆனால் இன்னமும் சில மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம், பின்தங்கிய நிலைமைதான் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ச்சி சதவீதத்தில் சராசரியில் பின்தங்கியுள்ள பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் கவனமாக செயல்பட வேண்டும். சராசரி தேர்ச்சி சதவீதத்திற்கும் குறைவான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தனியே கூட்டம் நடத்தி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆண்டு தொடக்கம் முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு நடைபெறும் தேர்வுகளில் தேர்ச்சிபெறாத மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் தனி பயிற்சி அளித்து வந்தால் படிப்படியாக பெரும்பாலான மாணவர்களும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவர். அரையாண்டு தேர்வு தர அட்டை வழங்கிய பிறகும் சில மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களையும் இனங்கண்டு தனிப்பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா