Skip to main content

குரூப் - 2: 5ம் கட்ட கலந்தாய்வு 24ல் துவக்கம்


கடந்த, 2012ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்ட, குரூப் -- 2 பணிகளுக்கான, ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 24ம் தேதியில் இருந்து துவங்குகிறது. இதுகுறித்த அறிவிப்பு:
ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான தேர்வு அடிப்படையில், குரூப் -
2 பதவிகளுக்கு, நேரடி நியமனத்திற்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., 2012 நவம்பரில் தேர்வு நடத்தியது.

இணையதளத்தில் இதில், நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு, இதுவரை, நான்கு கட்ட கலந்தாய்வு நடந்துள்ளது. மீதமுள்ள, 120 காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்ய, ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட, 354 விண்ணப்பதாரர் பதிவெண் அடங்கிய பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
இதில், சிறப்பு பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கு, 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு; 26ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. மற்றவர்களுக்கு, 26ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு; 27ம் தேதி
கலந்தாய்வு நடக்கிறது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை, தனித்தனியாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிடைக்கப் பெறாதவர்கள், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பங்கேற்காதவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது.
பட்டியலில் இடம் பெற்றவர்கள், குறிப்பிட்ட நாட்களில், எண்.3, பிரேசர் பால சாலை, சென்னை - -3ல் உள்ள, தேர்வாணைய அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு