Skip to main content

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் டிசம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை


 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், இன்று முதல், 24ம் தேதி வரை, விண்ணப்பித்துக் கொள்ளலாம் என, அரசு
த் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

கோவை வருவாய் மாவட்டத்தில், ஏழு சிறப்பு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடக்கவுள்ளது. இத்தேர்வுகளுக்கு அரசுத் தேர்வுத்துறையால் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையங்களை நேரடியாக அணுகி, ஆன்-லைன் முறையில், விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கோவை கல்வி மாவட்டத்தில், அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி (மாணவர்கள்), அரசு துணிவணிக மேல்நிலைப்பள்ளி (மாணவிகள்), சூலுார் அரசு மேல்நிலைப் பள்ளி (இருபாலர்), நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி (இருபாலர்) என, நான்கு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (இருபாலர்), நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (மாணவர்கள்), நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி (மாணவிகள்) ஆகிய மூன்று சிறப்பு சேவை மையங்கள், என, கோவை வருவாய் மாவட்டத்தில், மொத்தம் ஏழு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வுக் கட்டணம், 125 ரூபாய்; கூடுதலாக ஆன்-லைன் பதிவு கட்டணம் 50 ரூபாய் என, 175 ரூபாயை பணமாக மட்டுமே, செலுத்த வேண்டும். பார்வையற்றோருக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது. ஆன்-லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்தபின், தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு