Skip to main content

பின் நோக்கிய நினைவுகள் 2014” மன்னிப்பு கேட்ட பேஸ்புக்!


உலக மக்கள் அனைவரையும் கட்டிப் போட்டுள்ள பிரபல சமூக வலைதளமான பேஸ்புக், தன்னுடைய ஒரே ஒரு சொதப்பலால் பயனர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுதான் "2014 ஆம் ஆண்டின் பின்னோக்கிய நினைவுகள்". 

பேஸ்புக் தன்னுடைய பயனர்களுக்கு 2014 ஆம் ஆண்டில் வந்த பதிவுகளை
நினைவுபடுத்தும் விதமாக "பின் நோக்கிய நினைவுகள்" என்ற பெயரிட்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆண்டில் வந்த பதிவுகளை அனுப்பியது.

இதில் நண்பர்களையும், குடும்ப உறுப்பினர்களையும், வீடுகளை இழந்தவர்களையும் காயப்படுத்துவது போல், அவர்கள் தொடர்பான பதிவுகளை நினைவுபடுதுவதாக 'பின் நோக்கிய நினைவுகள்" அமைந்துவிட்டது. 

”பின் நோக்கிய நினைவுகள் 2014” - சொதப்போ சொதப்பென்று சொதப்பி மன்னிப்பு கேட்ட பேஸ்புக்! மன்னிப்பு கேட்ட பேஸ்புக்: தனது இந்த தவறான செயலுக்கு பேஸ்புக் தனது முகநூல் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. 

மனதை வாட்டும் சம்பவங்கள்: எல்லோருக்கும் ஆண்டு முழுவதும் நல்ல சம்பவங்கள் மட்டுமே நடக்க வாய்ப்பில்லை. சில எதிர்பாராத மரணங்களும், இழப்புகளும் நிகழ்ந்து விடுவது உண்டு. இழப்புகளை மறக்க விரும்பவே அனைவரும் நினைப்பார்கள். 

கடினமான தவிர்ப்பு: ஆனால் உங்கள் பின் நோக்கிய நினைவுகளை காண வேண்டுமா என்ற பேஸ்புக்கின் தொடர்ச்சியான நினைவூட்டல்களால் பேஸ்புக் பயனர்கள் இதை பார்க்காமல் தவிர்ப்பதும் கடினமானது. 

மன உளைச்சல் அடைய வைத்த போட்டோ: இப்படித்தான், அமெரிக்காவை சேர்ந்த எரிக் மேயர், இந்த வருடத்தின் தொடக்கத்தில் மூளை புற்றுநோயால் இறந்த தனது மகளின் புகைப்படத்தை அவரது பின் நோக்கிய நினைவுகளில் பார்த்தது கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். 

பெருமையான ஆண்டா இது?: மேலும் அதன் டேக் லைனில் இது ஒரு பெருமையான ஆண்டு என்று வேறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை அவர் தவறுதலான வழிமுறையின் கொடுமை என்ற தலைப்பில் தனது வலைப்பதிவில் ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளார். 

மன்னிப்பு கேட்ட பேஸ்புக்: இது குறித்து பேசிய பேஸ்புக்கின் தயாரிப்பு மேலாளர் ஜோனதன் கெல்லர் "இந்த சேவை நிறைய பேருக்கு அற்புதமான ஒரு அனுபவமாக இருந்தது. ஆனால் எரிக் மேயர் விவகாரத்தில் மகிழ்ச்சிக்கு பதிலாக நாங்கள் வருத்தத்தையே கொடுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது" என்று கூறியதுடன் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு