Skip to main content

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது.
தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகளை நேரிடையாகச் சென்று கணக்கெடுத்து அவர்களை பள்ளிக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, இந்தாண்டுக்கான கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல், 17ம் தேதி வரை, 11 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள, நகராட்சி, பஞ்சாயத்து, பேரூராட்சிக்கு உட்பட்ட 2,883 குடியிருப்பு பகுதிகளில் கணக்கெடுப்பு நடக்கிறது.
மேலும், செங்கல் சூளை, கட்டப் பணி, சாலைப் பணி, உணவு விடுதி மற்றும் இதரப் பணிகள் நடக்கும் இடங்களில் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இப்பணியில் மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் என 220 பேரும், சிறப்பாசிரியர்கள் 75 பேரும் ஈடுபடுகின்றனர். பள்ளிச் செல்லா, பள்ளியை விட்டு இடை நின்ற மாணவ, மாணவிகள் விவரங்கள் கண்டறிந்தால் தகவல் தெரிவிக்குமாறு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, சுகாதாரத் துறை, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கணக்கெடுப்பில் கண்டறியப்படும் 6 வயது முதல், 14 வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்பட்டு தனிக்கவனம் செலுத்தி, கல்வி கற்பிக்கப்படும். குறுகிய காலத்தில் பள்ளியை விட்டு இடைநின்ற 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு குறுகிய கால இணைப்பு மையம் மூலமும், மூன்று மாதங்களுக்கு மேல் பள்ளியை விட்டு இடை நின்றவர்களுக்கு நீண்ட கால இணைப்பு மையம் மூலமும் கல்வி கற்பிக்கப்படும்.
புலம் பெயர்ந்த, தெருவோரக் குழந்தைகள், நாடோடிக் குழந்தைகள், நரிக்குறவர் இன குழந்தைகள் ஆகியோருக்கு உண்டு உறைவிட மையம் மூலமும் கல்வி கற்பிக்கப்படும். கண்டறியப்படும் மாணவர்கள் தொடர்ந்து சிறப்பு பயிற்சி பெறுகிறார்களா என்பது குறித்து கண்காணிக்கப்படும் என, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு