Skip to main content

தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு: இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்


தொடக்கக் கல்வி டிப்ளமோ படிப்பில் முதலாண்டு, இரண்டாமாண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை புதன்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.

இதன்மூலம், கடந்த ஜூன் மாதம் தேர்வு எழுதிய சுமார் 15 ஆயிரம் பேர் தங்களது தேர்வு முடிவுகளை மதிப்பெண் சான்றிதழ்களின் மூலம் நேரடியாக அறிந்துகொள்ளலாம்.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை அவரவர் பயின்ற நிறுவனங்களிலேயே பெற்றுக்கொண்டு, தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். விடைத்தாள்களை மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவ, மாணவியர்கள் டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கான கட்டணத் தொகையை அவர்கள் நேரிலேயே செலுத்தலாம்.

முதலாமாண்டு, இரண்டாமாண்டு தேர்வெழுதி தோல்வியுற்ற மாணவர்கள் 2015-ஆம் ஆண்டில் தனித் தேர்வர்களாக எழுத ஜனவரி 19 முதல் 24 வரை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா