Skip to main content

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித் தேர்வர்கள் டிச.22 முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்கள் டிசம்பர் 22 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும்
அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த மையங்கள் குறித்த விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ.125-இல் இணையதளப் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். பார்வையற்றோருக்கு இந்தக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்புக்குப் பதிவு செய்த தனித் தேர்வர்கள், அதுதொடர்பான சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்