Skip to main content

ரூ.500,1000 நோட்டுகளை மாற்ற அவகாசம் நீட்டிப்பு


 ரூ.500,ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதியை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடித்துள்ளது ரிசர்வ் வங்கி. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டு்ள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருப்பதாவது:

கடந்த 2005ம் ஆண்டுக்கு முன், ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்ட ரூபாய்
நோட்டுகளில், ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்காது. 2005க்கு பின் வெளியான நோட்டுகளில் தான், எந்த ஆண்டில் அந்த நோட்டு தயாரிக்கப்பட்டது என்பது, தனியாக குறிக்கப்பட்டிருக்கும்.2005ம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட, 500, 1,000 ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் வெகுகுறைவாக இருப்பதால்,அந்த நோட்டுகளை மாற்ற, ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவை, ஜன., 1 வரை, ரிசர்வ் வங்கி நீட்டித்தது. இதுவரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 147 கோடி ரூபாய் மதிப்பிலான, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு உள்ளன.

இந்நிலையில் மேலும் ஆறுமாதம் காலஅவகாசம் அதாவது ஜூன் மாதம் 2015-ம் ஆண்டு வரையில் கால அவகாசம் அளித்துள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு