தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கு அனைத்து வட்டாரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது
. அதன்படி 2014-2015ம் கல்வியாண்டில் தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 27ம் தேதி நடத்தப்படும் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்திருந்தது. ஆனால் இத்தேர்வு ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் கூறுகையில், 2013-2014ம் கல்வியாண்டில் 7ம் வகுப்பில் 50 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே, இந்த தேசிய திறனாய்வு தேர்வு எழுத தகுதியானவர்கள். மேலும் இத்தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தது. தற்போது அது தள்ளி வைக்கப்பட்டு வரும் ஜனவரி 3ம் தேதி நடக்க உள்ளது என்று அரசு தேர்வு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது என்றார்.