Skip to main content

தபால்காரர், தபால் காப்பாளர் தேர்வு: இணையதளத்தில் அனுமதிச் சீட்டு வெளியீடு


தபால்காரர், தபால் காப்பாளர் (மெயில் கார்டு) தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தமிழக
அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவர் டி.மூர்த்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அஞ்சலக கோட்டம், அஞ்சல் பிரிப்பக கோட்டங்களில் 797- தபால்காரர், 9-தபால் காப்பாளர் பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழக அஞ்சல் வட்டத்தால், நவம்பர் 15-ஆம் தேதி காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கான தேர்வு டிசம்பர் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.

இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு www.dopchennai.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்து தேர்வர்கள் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக்கான இடமும், நேரமும் அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் தேர்வர்களுக்கு அனுமதிச் சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா