Skip to main content

யுஜிசி வழங்கும் கல்வி ஆராய்ச்சி உதவித்தொகை அதிகரிப்பு


கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்களை மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக்குழு மூலம் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 17ம் தேதி நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில்
அனைத்து வகை கல்வி உதவித்தொகைகளும் உயர்த்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வு பெற்ற பிறகும் ஆராய்ச்சியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் பேராசிரியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.31 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோல, முழுநேர ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கான உதவித்தொகை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.38,800 என்ற அளவிலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் ரூ.46,500 என்ற அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

குடும்பத்தில் தனி பெண் குழந்தையாக இருந்து ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்பவர்களுக்கான உதவித்தொகை மாதம் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.12,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மாதம் ரூ.15,000 என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும்.

குடும்பத்தில் தனி பெண் குழந்தையாக இருந்து முதுநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்பவர்களுக்கும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்று முதுநிலைப் பட்டப்படிப்பு மேற்கொள்பவர்களுக்கும் இதுவரை மாதம் ரூ.2 ஆயிரம் என்ற அளவில் 20 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இந்தத் தொகை இப்போது ரூ.3,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோல, பிற கல்வி உதவித்தொகைகளும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய முழுவிவரங்கள் தெரிந்து கொள்ள www.ugc.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா