Skip to main content

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க என்னென்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?
சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்க விரும்புபவர்கள் சிறப்பு பதிவு முகாம்களுக்கு ஆதார் அடையாள அட்டை நகல் 2, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் இருக்கவேண்டும் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை, கியாஸ் சிலிண்டர்
சமீபத்தில் வாங்கியதற்கான கட்டண ரசீது, ஒருவேளை கட்டண ரசீது இல்லை என்றால் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கான நுகர்வோர் அட்டையின் நகல் (நீல நிற புத்தகம்) மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும்.

ஆதார் அடையாள அட்டை மற்றும் தற்போது வசிக்கும் முகவரி ஆகியவற்றில் ஏதேனும் வேறுபாடுகள் இருப்பின் தற்போது வசிக்கும் முகவரியை நிரூபிப்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டும். ஆதார் அடையாள அட்டை இல்லாத வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலையில் வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடு இருக்கவேண்டும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு