Skip to main content

ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு: ஆன்-லைனில் பதிவு தீவிரம்


ஒன்று முதல் எட்டாம் வகுப்பில், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு முடிந்து, அந்த விபரங்கள் அனைத்தும் ஆன்-லைனில் பதிவு செய்யும் பணி, வட்டார வளமையங்களில் தீவிரமாக நடக்கிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வகுப்பில் மாணவரின் கற்றல்
அடைவுத்திறனை மேம்படுத்த, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும், நடப்பு கல்வியாண்டு முதல், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தாங்களாகவே தங்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யவும், வகுப்பில் எதிர்பார்த்த நிலையை அடையவும், தலைமை ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாட்டை ஆய்வு செய்து, அதன் மூலம் தேவையான முன்னேற்ற ஆலோசனைகள் வழங்க இத்திட்டம் வகுக்கப்பட்டது.நான்கு நிலை அளவுகோலினை அடிப்படையாக கொண்டு, வகுப்பறை நிகழ்வுகளின் வெளிப்பாடுகளை அளவிட தர அளவீடுகள் வடிவமைக்கப்பட்டது. எதிர்பார்த்த நிலைகளை அடையாமை, நெருங்குதல், அடைதல், மேல், என நான்கு தர அளவீடுகள் வகுக்கப்பட்டு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, 12 பக்கம் அடங்கிய படிவம் சமீபத்தில் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் ஈரோடு, கோபி ஆகிய இரு கல்வி மாவட்டகளுக்கும் வழங்கப்பட்டது. வகுப்பாசிரியர்கள் அல்லது தலைமை ஆசிரியர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விபரங்களை, ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆய்வு செய்து, அந்தந்த படிவத்தை, யூனியன் வாரியாக உள்ள வட்டார வளமையங்களுக்கு அனுப்பியுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 14 யூனியனுக்கும், பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் உள்ள அனைத்து விபரங்களும், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடுக்கு என உருவாக்கப்பட்ட, ஆன்-லைனில் பதிவு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.வகுப்பு, பாடம், மொத்த மாணவர்கள், 40 சதவீதத்துக்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள், 80 சதவீதம் வரை அல்லது அதற்கு மேல் மார்க் எடுத்தவர்கள், மதிப்பீடு மற்றும் பின்னூட்டம், மாணவர்களுடனான உறவு முறை, சக பணியாளர்களுடன் உறவு முறை, பணியிட பயிற்சி, பங்கேற்றல் மற்றும் சுயகற்றல், புதுமைப்படைத்தல் மற்றும் ஆய்வுகள் படைத்தல், பள்ளி வளர்ச்சி செயல்பாடுகளில் பங்கு கொண்டு உதவுதல், ஆசிரியர் வருகை, சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகிய விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது.மதிப்பீட்டில் ஆசிரியர் முழு திருப்தி அடைந்தது மற்றும் முன்னேற்றம் அல்லது உதவி தேவை குறித்து சுருக்கமான விபரம், தலைமை ஆசிரியரின் குறிப்பு, குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநரின் குறிப்பு மற்றும் தொகுக்கப்பட்ட படிவத்தின் விபரங்கள் என அனைத்தும் ஆன்-லைனில் பதிவு செய்யப்படுகிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு