Skip to main content

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரசுத் துறைகளில் பயிற்சி

பட்டப்படிப்பு, மேல்படிப்பு முடித்தவர்களுக்கு அரசுத் துறைகளில் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

இது தொடர்பாக அரக்கோணம் தொகுதி அதிமுக உறுப்பினர் ஜி. ஹரி
மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின் விவரம்:

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, மேல்படிப்பு, ஆய்வுப்பட்டம் மேற்கொள்ளும் நம் நாட்டு மாணவர்களுக்கு "எம்எச்ஆர்டி பயிற்சி திட்டம் -2014' என்ற பெயரில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், ஆய்வாளர்கள் அமைச்சகத்தின் பல்வேறு துறைகளில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா