Skip to main content

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ முடிகிறது

2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது.
கள்ள நோட்டு ஒழிக்க...

நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி
திட்டத்தை அறிவித்தது.

அதாவது, 2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள்தான் குறைவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டவை என்பதால், அந்த நோட்டுகளை ஒழித்து விட்டால் கள்ளநோட்டு புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என கருதியது. இதனால், 2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 22–ந் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

(ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட ஆண்டு இடம் பெற்றிருக்கும். இப்படி அச்சிடும் நடைமுறை 2005–ம் ஆண்டுக்கு பின்னர்தான் வந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட ஆண்டு இடம் பெற்றிருக்காது. இதை வைத்து 2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.)
‘கெடு’ முடிகிறது

இந்த உத்தரவின்படி பொதுமக்கள் தங்களிடமுள்ள, 2005–ம் ஆண்டுக்கு முன்பாக அச்சிடப்பட்ட 500 ரூபாய், 1,000 ரூபாய் உள்ளிட்ட அனைத்து மதிப்பிலுமான ரூபாய் நோட்டுகளையும் வங்கிகளில் கொடுத்து மாற்ற தொடங்கினார்கள்.

இப்படி மாற்றுவதற்கான கால ‘கெடு’ வரும் ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது.

எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கெடு முடிவதற்குள், வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
இதுவரை எவ்வளவு?

இதுவரை இந்திய ரிசர்வ் வங்கி, ரூ.52 ஆயிரத்து 855 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்துள்ளது.

இதே போன்று, ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்கள் ரூ.73.2 கோடி மதிப்பிலான ரூ.100 நோட்டுகளையும், ரூ.51.85 கோடி மதிப்பிலான ரூ.500 நோட்டுகளையும், ரூ.19.61 கோடி மதிப்பிலான ரூ.1,000 நோட்டுகளையும் மாற்றிக்கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா