Skip to main content

தொலைதூர கல்வி மையங்கள் படிப்படியாக மூட நடவடிக்கை

தொலைதூர கல்வி மையங்கள் படிப்படியாக மூட நடவடிக்கை - யுஜிசி துணைத்தலைவர் தகவல்
திருச்சி பாரதிதாசன் பல்கலை. 31வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், 606 பேருக்கு தமிழக கவர்னர் ரோசய்யா பட்டம்  வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 72,720 மாணவ, மாணவிகளுக்கு பட்டம்
வழங்கப்பட்டது. விழாவில், டெல்லி பல்கலைக்கழக நிதி  நல்கைக்குழு (யுஜிசி) துணைத்தலைவர் பேராசிரியர் தேவராஜ் பேசியதாவது:
யுஜிசி வழங்கும் நிதியை எதிர்பார்த்து பல்கலைக்கழகங்கள்  இருக்கக்கூடாது. யுஜிசி நிதியில்லாமலேயே பல்கலைக்கழகங்கள் சுயமாக செயல்பட முடியும். மாணவர்களை திறன் மிக்க மனிதவளமாக உருவாக்கும்  வகையில், யுஜிசி சார்பில், தலா ஸீ5 கோடி மதிப்பீட்டில் 100 ‘குஷால்‘ மையங்கள் நாடு முழுவதும் துவங்கப்பட்டு வருகிறது.

நாட்டில் உள்ள இக்னோ உள்ளிட்ட தொலைதூர கல்வி மையங்கள் மற்றும் கற்றல் மையங்கள் படிப்படியாக குறைக்கப்பட உள்ளது. தொலைதூர  மையங்களுக்கு மாற்றாக ‘மாஸிவ் ஓப்பன் ஆன்லைன் கோர்சஸ்‘ (மூக்ஸ்) திட்டத்தின்கீழ் ஆன்லைன் மூலம் தொலைதூர வகுப்புகள் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.