Skip to main content

கேந்திரிய வித்யாலயா 50 ஆண்டுகள் நிறைவு: நினைவு அஞ்சல் தலை வெளியீடு


இந்திய அஞ்சல் துறை சார்பில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் சிறப்பு அஞ்சல் தலை, உறை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

சென்னையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் 51-ஆவது
ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், கேந்திரிய வித்யாலயா சங்கதனின் சென்னை மண்டலம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் தலை, அஞ்சல் உறையை வெளியிட்டு, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸெண்டர் பேசியதாவது:

மத்திய அரசின் நிறுவனமான கேந்திரிய வித்யாலயா, வெற்றிகரமாக 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், சிறப்பு அஞ்சல் தலை, அஞ்சல் உறையை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசால், ஆண்டுதோறும் 42 முதல் 50 சதவீத அஞ்சல் தலைகள் மட்டுமே முக்கிய நிகழ்வுகளை குறிப்பிடும் வண்ணம் வெளியிடப்படுகிறது. இவற்றில் 25 சதவீதம் முக்கியத் தலைவர்கள், பிரபலங்கள் சார்ந்ததாகும். மீதமுள்ளவை தாவரங்கள், விளையாட்டு, பாதுகாப்பு, கலாசாரம் போன்ற பல துறைகளைச் சார்ந்தவையாக இருக்கும்.

உலகளவில் தீவிர அஞ்சல் தலை சேமிப்பாளர்களாக 6 கோடி பேர் உள்ளனர். இருப்பினும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தனது சேவையை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் குழந்தைகளுக்கும் வழங்க முன் வர வேண்டும்.

தற்போது, ஹார்வர்டு பல்கலைக்கழகம் கூட குறைந்த கட்டண அடிப்படையில் பாடங்களை கற்பிக்கத் தொடங்கியுள்ளனர். ஆகையால், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் குறைந்தக் கட்டணத்தில் குழந்தைகளுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில், கேந்திரிய வித்யாலயா தென் மண்டல துணை ஆணையர் எஸ்.எம்.சலீம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஏ.பி.மண்டல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா