Skip to main content

கேந்திரிய வித்யாலயா 50 ஆண்டுகள் நிறைவு: நினைவு அஞ்சல் தலை வெளியீடு


இந்திய அஞ்சல் துறை சார்பில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் சிறப்பு அஞ்சல் தலை, உறை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

சென்னையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் 51-ஆவது
ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், கேந்திரிய வித்யாலயா சங்கதனின் சென்னை மண்டலம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் தலை, அஞ்சல் உறையை வெளியிட்டு, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸெண்டர் பேசியதாவது:

மத்திய அரசின் நிறுவனமான கேந்திரிய வித்யாலயா, வெற்றிகரமாக 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், சிறப்பு அஞ்சல் தலை, அஞ்சல் உறையை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசால், ஆண்டுதோறும் 42 முதல் 50 சதவீத அஞ்சல் தலைகள் மட்டுமே முக்கிய நிகழ்வுகளை குறிப்பிடும் வண்ணம் வெளியிடப்படுகிறது. இவற்றில் 25 சதவீதம் முக்கியத் தலைவர்கள், பிரபலங்கள் சார்ந்ததாகும். மீதமுள்ளவை தாவரங்கள், விளையாட்டு, பாதுகாப்பு, கலாசாரம் போன்ற பல துறைகளைச் சார்ந்தவையாக இருக்கும்.

உலகளவில் தீவிர அஞ்சல் தலை சேமிப்பாளர்களாக 6 கோடி பேர் உள்ளனர். இருப்பினும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தனது சேவையை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் குழந்தைகளுக்கும் வழங்க முன் வர வேண்டும்.

தற்போது, ஹார்வர்டு பல்கலைக்கழகம் கூட குறைந்த கட்டண அடிப்படையில் பாடங்களை கற்பிக்கத் தொடங்கியுள்ளனர். ஆகையால், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் குறைந்தக் கட்டணத்தில் குழந்தைகளுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில், கேந்திரிய வித்யாலயா தென் மண்டல துணை ஆணையர் எஸ்.எம்.சலீம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஏ.பி.மண்டல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு