Skip to main content

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம்


மாநிலம் முழுவதும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை எக்காரணங்கள் கொண்டும், பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை தடை
விதித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19 முதல் ஏப்., 10 வரை நடக்கிறது. இத்தேர்வில், பங்கேற்கவுள்ள மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கும் பணி, தற்போது மாநிலம் முழுவதும் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, பள்ளிக்கல்வித்துறையால், வழங்கப்பட்ட புதிய சாப்ட்வேர் பயன்படுத்தி, மாணவர்களின் பெயர்கள், 'ஆப்-லைன்'ல் பதிவு செய்யும் பணிகள், நடந்து வருகின்றன.ஆப்-லைனில் பதிவு செய்யும் பணிகள், வரும் 24ம் தேதி மாலைக்குள் நிறைவு செய்து, ஆன்-லைனில் ஜன., 2 முதல் ஜன., 6க்குள் முடிக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர் பட்டியலில் தவறுகள், பிழைகள் இருப்பின் தலைமையாசிரியர்களே, முழுபொறுப்பை ஏற்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் விவரங்களை, www.tnge.in என்ற இணையதளத்தில், பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள, யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி ஆன்-லைனில் பதிவு செய்துகொள்ளவேண்டும். புதிதாக தரம் உயர்த்தப்பட்ட, பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலகத்தில், யூசர் ஐ.டி., பாஸ்வோர்டு பெற்றுக்கொள்ளலாம். ஆன்-லைனில் விவரம் பதிவேற்றம் செய்யும் பணிகளை, பிரவுசிங் சென்டர்களில் எக்காரணங்களை கொண்டும் மேற்கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், மாணவர்களின் பட்டியல் ஆப்-லைனில் பதிவேற்றும் பணி, 90 சதவீதம் முடிந்துள்ளதாகவும், ஆன்-லைன் பணிகளை மேற்கொள்ள தயார்நிலையில் இருக்குமாறும், தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு