எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய்வழி திறனறி தேர்வு தேதி, மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் வெற்றி பெறுவோருக்கு மாதம், 500 ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு
உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தாண்டு தேர்வு முதலில் கடந்த, 27ல், நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அரையாண்டு விடுமுறையால், ஜன., 3க்கு, மாற்றப்பட்டது.விடுமுறை முடிந்து, பள்ளி துவங்கியதும் தேர்வு நடத்த வேண்டாம் என, முடிவு எடுத்துள்ளதால், ஜன., 24ம் தேதி தேர்வு நடத்த, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.