Skip to main content

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3-ம் மொழிப்பாட விவகாரம்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3-ம் மொழிப்பாட விவகாரம்: மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்றது உச்சநீதிமன்றம்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3ஆம் மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வு நடத்தப்படாது என்ற மத்திய அரசின் உறுதிமொழியை
உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
3ஆம் மொழிப்பாடமாக ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழியை கற்கலாம் என அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். 

கேந்திரிய வித்யாலயா மாணவர்கள், நடப்பு கல்வியாண்டில் விருப்பப்பாடமாக ஜெர்மன் மொழி தேர்வை எழுதிக் கொள்ளலாம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஜெர்மன் அல்லது வேறு மொழியை இனி விருப்பப்பாடமாக கற்கலாம் என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழிதேர்வை அடுத்த ஆண்டு முதல் எழுதிக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

10ம் வகுப்பு துணைத்தேர்வு தக்கலில் விண்ணப்பிக்க ஏற்பாடு

கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்காக ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. கடைசி நாள் வரை விண்ணப்பிக்காதவர்கள்