அரசு கலை அறிவியல் கல்லூரி களுக்கு 1,095 உதவி பேராசிரியர் களை தேர்வுசெய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. தமிழ், பொருளாதாரம், புவியி யல், வணிகவியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், உடற்கல்வி உள்பட 10 பாடங் களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர்
15 முதல் 19-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட அனைத்துவிண்ணப் பதாரர்களின் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.