Skip to main content

6,000 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் செவிலியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்க தேசிய மருந்தியல்
விழா, மாநில பொதுக்குழு, மாநில செயற்குழு ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பேசியது:

அரசுப் பணிகளில் செம்மையோடும், சேவை மனப்பான்மையோடும் பணியாற்றக் கூடிய துறை சுகாதாரத் துறைதான். எனவே, மருந்தாளுநர்களின் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து நிறைவேற்ற தமிழக அரசு தயாராக உள்ளது.

சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ, கடந்த ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.3,888 கோடியை விட தற்போது ரூ.7,005 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 770 நடமாடும் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு அதில், மருந்தாளுநர்களுக்கு பணி வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் மருத்துவப் பணியாளருக்கான தேர்வு வாரியம் அமைத்து அதன் மூலம் 4 ஆயிரம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 2,170 மருத்துவர்களும், 1,727 சிறப்பு மருத்துவர்களும் நியமிக்கப்படவுள்ளனர். தமிழகம் முழுவதும் விரைவில் 6 ஆயிரம் செவிலியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 5.50 லட்சம் பேர் புற நோயாளிகளாகவும், உள் நோயாளிகளாக 80 ஆயிரம் பேரும், 2 ஆயிரம் தாய்மார்கள் பிரசவத்துக்காகவும் அரசு மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். எனவே, மருத்துவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மருந்தாளுநர்கள் மக்களிடம் எப்போதும் கருணையுடன் பணியாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

முன்னதாக, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், இஎஸ்ஐ- மருத்துவம், ஊரகப்பணிகள் இயக்குநர் என். கார்த்திகேயன் உள்ளிட்டோர் பேசினர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்