Skip to main content

6,000 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் செவிலியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்க தேசிய மருந்தியல்
விழா, மாநில பொதுக்குழு, மாநில செயற்குழு ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பேசியது:

அரசுப் பணிகளில் செம்மையோடும், சேவை மனப்பான்மையோடும் பணியாற்றக் கூடிய துறை சுகாதாரத் துறைதான். எனவே, மருந்தாளுநர்களின் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து நிறைவேற்ற தமிழக அரசு தயாராக உள்ளது.

சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ, கடந்த ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.3,888 கோடியை விட தற்போது ரூ.7,005 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 770 நடமாடும் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு அதில், மருந்தாளுநர்களுக்கு பணி வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் மருத்துவப் பணியாளருக்கான தேர்வு வாரியம் அமைத்து அதன் மூலம் 4 ஆயிரம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 2,170 மருத்துவர்களும், 1,727 சிறப்பு மருத்துவர்களும் நியமிக்கப்படவுள்ளனர். தமிழகம் முழுவதும் விரைவில் 6 ஆயிரம் செவிலியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 5.50 லட்சம் பேர் புற நோயாளிகளாகவும், உள் நோயாளிகளாக 80 ஆயிரம் பேரும், 2 ஆயிரம் தாய்மார்கள் பிரசவத்துக்காகவும் அரசு மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். எனவே, மருத்துவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மருந்தாளுநர்கள் மக்களிடம் எப்போதும் கருணையுடன் பணியாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

முன்னதாக, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், இஎஸ்ஐ- மருத்துவம், ஊரகப்பணிகள் இயக்குநர் என். கார்த்திகேயன் உள்ளிட்டோர் பேசினர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா