Skip to main content

காமராஜர் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு (சிபிசிஎஸ்) பருவமுறை நவம்பர் 2014 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக தேர்வாணையர் பெ.விஜயன்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்பு (சிபிசிஎஸ்) பருவமுறை நவம்பர் -2014 தேர்வு முடிவுகள் கீழ்கண்ட பாடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் பட்டப்படிப்புகளுக்கு டிசம்பர் 18-ம் தேதியும், எம்.காம்(சிஏ), எம்.எஸ்.ஐ.டி, எம்.எஸ்சி(ஐடிஎம்), எம்.ஏ. ஆங்கிலம் ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு டிசம்பர் 19-ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இத்தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளம் ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ர்ழ்ஞ் என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட பாடங்களுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திராமல், அதற்குரிய விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், அதற்குரிய விண்ணப்பங்களை ஜனவரி 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வாணையர் அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

மறுமதிப்பீட்டு கட்டணத்தை கேட்பு வரைவோலையாக மட்டுமே அனுப்ப வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. செலுத்திய பணமும் திரும்ப தரப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா