Skip to main content

காமராஜர் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு (சிபிசிஎஸ்) பருவமுறை நவம்பர் 2014 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக தேர்வாணையர் பெ.விஜயன்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்பு (சிபிசிஎஸ்) பருவமுறை நவம்பர் -2014 தேர்வு முடிவுகள் கீழ்கண்ட பாடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் பட்டப்படிப்புகளுக்கு டிசம்பர் 18-ம் தேதியும், எம்.காம்(சிஏ), எம்.எஸ்.ஐ.டி, எம்.எஸ்சி(ஐடிஎம்), எம்.ஏ. ஆங்கிலம் ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு டிசம்பர் 19-ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இத்தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளம் ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ர்ழ்ஞ் என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட பாடங்களுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திராமல், அதற்குரிய விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், அதற்குரிய விண்ணப்பங்களை ஜனவரி 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வாணையர் அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

மறுமதிப்பீட்டு கட்டணத்தை கேட்பு வரைவோலையாக மட்டுமே அனுப்ப வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. செலுத்திய பணமும் திரும்ப தரப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு