Skip to main content

ஸ்கைப், வைபர் அழைப்புகளுக்கு கட்டணமில்லை: ஏர்டெல்!


ஸ்கைப், வைபர் அழைப்புகளுக்கு கட்டணமில்லை: முடிவை கைவிட்டது ஏர்டெல்!

டுமையாக எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து ஸ்கைப், வைபர், லைன், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் மூலம் செய்யப்படும் வாய்ஸ் சேவைகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் முடிவை ஏர்டெல் நிறுவனம்
கைவிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான பாரதி ஏர்டெல், இலவசமாக வழங்கி வந்த ஸ்கைப், வைபர், லைன், பேஸ்புக் மெஸ்ஸெஞ்சர் மற்றும்
கூகிள் ஹேங் அவுட் மூலம் செய்யப்படும் வாய்ஸ் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது.

ஆனால், இந்த அதிர்ச்சி செய்தியை பலரும் எதிர்பார்க்கவில்லை. உலகெங்கும் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் எந்த விதமான
கட்டணமும் இல்லாமல் பேசும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும் இது ஒரு அதிர்ச்சிகரமான செய்தியாகத்தான் அமைந்தது.

ஏர்டெல் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட இருந்த அந்த புதிய வாய்ஸ் கால் பேக் மூலம் 1MB ஒரு என 1ஜிபி டேட்டா, 3ஜி சேவையில் 4,000 ரூபாய் வரையிலும், 2ஜி சேவையில் 10,000 ரூபாய் வரையிலும் வசூலிக்க இருந்தது.

இதன்விளைவாக மக்கள் அனைவரும் அவரவர் ஆதங்கத்தையும், அதிருப்தியையும் #boycottairtel என்ற டேக்கில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கொட்டி தீர்த்தனர்.
பலர் உண்மையாகவே ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணித்து வேறு நிறுவனங்களுக்கு தங்களது சிம்களை போர்ட் செய்தனர். இன்னும் சிலர் வாட்ஸ் அப் மூலம் "ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிப்போம்" என்று மெசேஜ்களை பார்வர்ட் செய்த வண்ணம் இருந்தனர்.



இது போன்ற பல பிரச்னைகளும், எதிர்ப்புகளும் கிளம்பியது. அதுமட்டுமன்றி நிறுவன ரீதியாகவும் ஏர்டெல் நிறுவனத்திற்கு பல நெருக்கடிகள் வரவே, மேற்கூறிய கட்டணம் வசூலிக்கும் முடிவை தற்போதைக்கு கைவிடுவதாகவும், இனி வழக்கம் போல் இணைய வாய்ஸ் அழைப்புகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என ஏர்டெல் தெரிவித்துள்ளது. 

இந்த திடீர் செய்தி வெளியீட்டால் ஏர்டெல் எதிர்ப்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை அவர்களின் புறக்கணிப்புக்கு கிடைத்த வெற்றியாகவே கருதி கொண்டாடி வருகின்றனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா