Skip to main content

2016ல் சி.ஏ., படிப்புக்கு புதிய பாடத்திட்டம்


சி.ஏ., படிப்புக்கு, முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம், 2016ல் அறிமுகம் செய்யப்படுகிறது,'' என, ஐ.சி.ஏ.ஐ., பாடத்திட்டக்குழு தலைவர், ஆடிட்டர் தேவராஜ் ரெட்டி தெரிவித்தார்.இந்திய பட்டயக் கணக்காளர்
கூட்டமைப்பு (ஐ.சி.ஏ.ஐ.,), கோவை கிளை மற்றும் சி.ஏ., மாணவர்கள் சங்கம் சார்பில், இரண்டு நாள் கருத்தரங்கு, கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில், நேற்று துவங்கியது.

அகில இந்திய பட்டயக் கணக்காளர் கூட்டமைப்பின், முன்னாள் தலைவர் ராமசாமி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில், ''நாட்டின் பொருளாதார
வளர்ச்சியில், ஆடிட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அனைவரும், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த ஜி.எஸ்.டி., வரி விதிப்பு குறித்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. விரைவில், அமல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.

ஐ.சி.ஏ.ஐ., பாடத்திட்டக்குழு தலைவர், ஆடிட்டர் தேவராஜ் ரெட்டி பேசுகையில், ''முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட சி.ஏ., பாடத்திட்டம், வரும் 2016ல் வெளிவர உள்ளது.
பாடத்திட்டம் சிறப்பாக அமைய, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சி.ஏ., மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, இரண்டு மடங்காக, சமீபத்தில் உயர்த்தப்பட்டு உள்ளது,'' என்றார்.கருத்தரங்கு, இன்று நிறைவடைகிறது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா