Skip to main content

அரசு நர்சிங் பள்ளிகளிலும் தலா 100 மாணவிகளை சேர்த்து கொள்ள அரசு அனுமதி

வரும் ஆண்டில் அனைத்து அரசு நர்சிங் பள்ளிகளிலும் தலா 100 மாணவிகளை சேர்த்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 23 அரசு நர்சிங் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 11 பள்ளிகளில் 50 இடங்கள், மற்ற
பள்ளிகளில் 60 முதல் 90 இடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன. தேவை காரணமாக சென்னை, மதுரை உள்ளிட்ட நர்சிங் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலான மாணவிகள் சேர்க்கப்பட்டு வந்தனர்.
உபரியாக சேர்க்கப்பட்ட மாணவிகளை திடீரென தமிழக நர்சிங் கவுன்சிலும், இந்திய நர்சிங் கவுன்சிலும் பதிவுசெய்ய மறுத்து விட்டன. தமிழக அரசின் முயற்சியால் தற்போது அவர்களை நர்சிங் கவுன்சில் பதிவு செய்துள்ளது. இந்த பிரச்னையை தவிர்க்க 2015 ஆண்டு முதல் திண்டுக்கல்லை தவிர்த்து 22 நர்சிங் பள்ளிகளிலும் 100 மாணவிகளை சேர்த்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 'தேவையான கட்டட வசதி ஏற்படுத்திய பின் திண்டுக்கல் நர்சிங் பள்ளியிலும் 2016 முதல் 100 மாணவிகளை சேர்க்கப்படுவர்' என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்