Skip to main content

அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு

காலிப்பணியிடங்களை நிரப்பவும், காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணிவழங்கவும் ஆசிரியர் தகுதித்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கி
உள்ளது.
திண்டிவனத்தை சேர்ந்த ஜி.நாகராஜன், நெல்லை மாவட்டம், மடத்தூரை சேர்ந்த சித்ரா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013 ஏப்ரல் மாதம் நடந்தது. அதன் பிறகு தேர்வு நடைபெறவில்லை. கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க முடியாது. ஆனால், இந்த ஆண்டு தேர்வு நடத்தப்படவில்லை. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘‘ என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:இதே கோரிக்கையுடன் வந்த பல ஆசிரியர்களுக்கு இந்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவு பிறப்பித்து அவர்கள் மேலும் 5 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் நீடிக்க உத்தரவிடப்பட்டது. தற்போது, தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சிகள் சார்பில்நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றுமனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். இதை அரசுகவனத்தில் கொள்ள வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் முழு தகுதி பெற்றிருந்தும் அவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவர்களால் பணியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு இதை கருத்தில் கொண்டு தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு