Skip to main content

அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு

காலிப்பணியிடங்களை நிரப்பவும், காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணிவழங்கவும் ஆசிரியர் தகுதித்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கி
உள்ளது.
திண்டிவனத்தை சேர்ந்த ஜி.நாகராஜன், நெல்லை மாவட்டம், மடத்தூரை சேர்ந்த சித்ரா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013 ஏப்ரல் மாதம் நடந்தது. அதன் பிறகு தேர்வு நடைபெறவில்லை. கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க முடியாது. ஆனால், இந்த ஆண்டு தேர்வு நடத்தப்படவில்லை. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘‘ என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:இதே கோரிக்கையுடன் வந்த பல ஆசிரியர்களுக்கு இந்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவு பிறப்பித்து அவர்கள் மேலும் 5 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் நீடிக்க உத்தரவிடப்பட்டது. தற்போது, தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சிகள் சார்பில்நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றுமனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். இதை அரசுகவனத்தில் கொள்ள வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் முழு தகுதி பெற்றிருந்தும் அவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவர்களால் பணியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு இதை கருத்தில் கொண்டு தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா