Skip to main content

ஆக்ஸ்போர்டு பேராசிரியருக்கு ‘சாஸ்த்ரா-ராமானுஜன் விருது’



கணிதத்தில் சாதனைபுரிந்த 27 வயதேயான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் மெனார்டுக்கு ‘சாஸ்திரா- ராமானுஜம் விருது 2014
’ மற்றும் 10 ஆயிரம் டாலர் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் சாதனைகளை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான டிசம்பர் 22ம் தேதி இளம் கணிதவியலாளருக்கு இந்த விருதை வழங்கி கவுரவிக்கிறது சாஸ்திரா பல்கலைக்கழகம். கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான விருது, ஆக்ஸ்போடு பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., பட்டம் பெற்ற ஜேம்ஸ் மெனார்டுக்கு வழங்கப்பட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மங்கலம் ஸ்ரீனிவாசன் இவ்விருதை வழங்கினார்.
கணிதவியலாளர் ஜேம்ஸ் மெனார்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘பிரைம் நம்பர் தியரி’யில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். பிரபல பால் எர்டோஸின் ‘பிரைம் நம்பர்’களுக்கு இடையேயான ’லார்ஜ் கேப்ஸ் பிராப்ளம்’ ஜேம்ஸ் மெனார்டால் தீர்க்கப்பட்டது.
கணிதமேதை ராமானுஜத்தின் 127வது பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள சாஸ்திரா பல்கலையின் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தில் ‘எண் தியரி’ குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா