Skip to main content

கருணை அடிப்படையில் பணி நியமனம்: 18 வயது நிரம்பாதோர் மனுக்களைப் பரிசீலிக்க உத்தரவு


கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில், 18 வயதை நிறைவு செய்யாமல் பணியில் சேர்ந்தவர்களின் மனுக்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது.

அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும்போது, அவர்களின்
வாரிசுகள் 18 வயது நிறைவடைவதற்கு முன்பே அரசுப் பணிக்கு விண்ணப்பித்து அதில் சேரும் நிலை இருந்து வருகிறது. ஆனால், அரசுப் பணியில் புதிதாக சேர்பவர்கள் அந்தப் பணிக்குரிய அனைத்து கல்வித் தகுதிகளையும் பெற்றிருப்பதுடன் 18 வயதையும் நிறைவு செய்திருக்க வேண்டும். இதுதொடர்பான உத்தரவை பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத் துறை கடந்த 2005-இல் வெளியிட்டது. இதன்படி, கருணை அடிப்படையிலான பணிக்கான மனுவை, சம்பந்தப்பட்ட வாரிசுதாரர் மூன்று ஆண்டுகளுக்குள் அளிக்க வேண்டும். மேலும், 18 வயது நிரம்பிய வாரிசுதாரர் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனம் பெறத் தகுதியானவர் எனவும், மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பம் அளிக்கும் நாளை கணக்கில் கொண்டு வயது, கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிக்கல் எங்கே எழுந்தது?: பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை 2005-ஆம் ஆண்டில் உத்தரவை வெளியிட்ட நிலையில், தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறையானது கடந்த 2010-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதியன்று மற்றொரு அறிவுறுத்தலை வழங்கியது. அதன்படி, உத்தரவு வெளியான தினத்தில் (மே 2010) 18 வயது நிரம்பியிருந்தால் கருணை அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்புத் துறை அறிவித்தது.

இதனால், பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத் துறை உத்தரவு வெளியிட்ட காலத்துக்கும், வேலைவாய்ப்புத் துறை வெளியிட்ட உத்தரவுக்கும் இடைப்பட்ட காலத்தில், விண்ணப்ப நாளின்போது 18 வயதை நிறைவு செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்குமா அல்லது வேலை கிடைத்தவர்களின் நிலை என்ன என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை செயலாளர் எம்.வீரசண்முகமணி புதிய தெளிவுரையை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு