Skip to main content

ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு எழுத்து தேர்வு


        'போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு மூலம், தேர்வு செய்ய வேண்டும்' என, சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

20 ஆண்டுகள்:

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, கோவைசாமி என்பவர், தாக்கல் செய்த மனு: வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து, 20 ஆண்டுகள் ஆகியும், வேலை கிடைக்கவில்லை. எனக்கு வயது, 44. போக்குவரத்து கழகத்தில், பணி கிடைக்க, என் பெயரை பரிந்துரை செய்யும்படி, சென்னையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பரிசீலித்த பின், நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: போக்குவரத்து கழகங்களில் நடக்கும் தேர்வுகள், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே நடப்பதால், அதுகுறித்து பொதுமக்களின் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்வது, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு, உண்மையானதாக இல்லை. ஒரு சில நிமிடங்களில், நேர்முகத் தேர்வு முடிந்து விடுகிறது. பணியிடங்களுக்கான நியமனங்கள், பணி விதிகளின்படி, இடஒதுக்கீட்டு அடிப்படையில் இருக்க வேண்டும். எனவே, தொழில்நுட்பம், டிராபிக், நிர்வாக துறைகளில், குரூப் - சி பணியிடங்களுக்கு, கீழ்கண்ட முறையில் தேர்வு செய்ய வேண்டும்.

* வேலைவாய்ப்பகம் மட்டும் அல்லாமல், வெளிச்சந்தை மூலமாகவும், விண்ணப்பங்களை வரவேற்று, நிரப்ப வேண்டும்.


* சில பணியிடங்களுக்கு, பணி விதிகளின்படி, கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 என, நிர்ணயிக்கப்பட்டிருந்தால், படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு, 'வெயிட்டேஜ்' அளிக்க வேண்டும் அல்லது எழுத்து தேர்வு நடத்த வேண்டும்.


* 10ம் வகுப்புக்கு குறைவான கல்வி தகுதி அல்லது பட்டப் படிப்பு என, நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அந்த கல்வித் தகுதிக்கு இணையாக, எழுத்து தேர்வு மூலம் மட்டுமே, தேர்வு செய்ய வேண்டும்.

தேர்வு ஏஜன்சி:

இந்த உத்தரவு, அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் பொருந்தும். தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாகவோ அல்லது போக்குவரத்து கழகங்கள் சேர்ந்து, மத்திய தேர்வு ஏஜன்சியை ஏற்படுத்தி, அதன் மூலமாகவோ, எழுத்து தேர்வு நடத்தி, தேர்வு செய்யலாம். இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரரின் வயதை கருத்தில் கொள்ளாமல், அடுத்தகட்ட தேர்வின் போது, சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு