Skip to main content

அரசு போக்குவரத்து கழகத்தில் ஜனவரி 3ம் தேதி புதிதாக 2,500 பேர் நியமனம்:

அரசு போக்குவரத்து கழகத்தில் ஜனவரி 3ம் தேதி புதிதாக 2,500 பேர் நியமனம்: எழுத்துத் தேர்வு பற்றி ஆலோசனை
சென்னை உள்பட 8 அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் என 2,500 பேரை அடுத்த மாதம் 3ம் தேதி நியமனம்  செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இவர்களுக்கான எழுத்துத் தேர்வு நடத்துவது குறித்து அதிகாரிகள்
ஆலோசித்து வருகின்றனர்.
தமிழகத்தில்  சென்னை, விழுப்புரம், கும்பகோணம் உள்பட மொத்தம் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள்,  இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்டவைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு, கடந்த மாதம் 3ம் தேதி இதற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் 20ம் தேதி வரை விண்ணப்பம் விற்பனை செய்யப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இந்த மாதம் 10ம் தேதி வரை  பெறப்பட்டது. பின்னர் குறிப்பிட்ட பணியிடங்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில், “ போக்குவரத்து கழகங்கள் பணியாளர்களை புதிதாக நியமனம் செய்யும் போது அவர்களுக்கு எழுத்துத்  தேர்வும் நடத்த வேண்டும்“ என தெரிவித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்டு,  அவர்களுக்கான நேர்முகத் தேர்வு அந்தந்த போக்குவரத்து கழகங்களில் நடந்து வரும் நிலையில், இவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் நேர்முகத் தேர்வு நடந்து வருகிறது. 

நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ளதால், இந்த பணி நியமனங்களுக்கு எழுத்துத் தேர்வு வைக்கலாமா,  வேண்டாமா என ஆராய்ந்து வருகிறோம். இருப்பினும் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் என 2,500 பேரை மட்டும் தற்போதைய நடைமுறைப்படி அடுத்த  மாதம் 3ம் தேதி பணி நியமனம் செய்ய உள்ளது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு