Skip to main content

3 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு.

விருதுநகர் மாவட்டத்தில் 3 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகதரம் உயர்த்தி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார்
தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள என்.ஜி.ஓ காலனி நடுநிலைப்பள்ளி, சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் கோப்பநாயக்கன்பட்டி நடுநிலைப்பள்ளி மற்றும் வெம்பக்கோட்டை ஒன்றியம் முத்தாண்டியாபுரம் நடுநிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளையும் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்களை பாடவாரியாக பணி நிரவல் மூலம் ஒதுக்கீடு செய்யவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்