விருதுநகர் மாவட்டத்தில் 3 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகதரம் உயர்த்தி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார்
தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள என்.ஜி.ஓ காலனி நடுநிலைப்பள்ளி, சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் கோப்பநாயக்கன்பட்டி நடுநிலைப்பள்ளி மற்றும் வெம்பக்கோட்டை ஒன்றியம் முத்தாண்டியாபுரம் நடுநிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளையும் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்களை பாடவாரியாக பணி நிரவல் மூலம் ஒதுக்கீடு செய்யவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.