Skip to main content

ஆசிரியர்கள் பிஎப் தணிக்கை விவகாரம் 63 தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ்


ஊரா ட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சேமநல நிதி கணக்கு தொடர்பாக, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில்  பதிவு செய்யும் பணி நடக்கிறது. ஆனால், தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களின் சேமந
ல நிதி  கணக்குகள் 2013-14ம் ஆண்டு வரை உள்ள விவரங்களை ஒன்றியம் வாரியாக தகவல் தொகுப்பு ஆணையருக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த  மாதம் 28ம் தேதி தகவல் தொகுப்பு விவர மைய ஆணையர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 327 உதவி தொடக்க கல்வி அலுவலகங்களின் கணக்குகள்  தணிக்கை முடிந்துவிட்டதாகவும், மீதமுள்ள 63 அலுவலகங்களின் தணிக்கை இன்னும் முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த 63 அலுவலகங்கள்  இன்னும் ஆவணங்களை அனுப்பவில்லை. மேலும், விழுப்புரம், நீலகிரி, திருவள்ளூர், திண்டுக்கல் ஆகிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கீழ் வரும்  உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை சேர்ந்த அலுவலர்கள் கணக்கு தணிக்கையை முடிக்க ஒத்துழைக்கவில்லை.

இந்த கணக்கு தணிக்கை வரும் 26ம் தேதிக்குள் (நாளை) முடித்து அதன் விவரங்களை சென்னையில் உள்ள மாநில கணக்கு தணிக்கை தலைவரிடம் ஒப்படைக்க  வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தும் இன்னும் மேற்கண்ட அலுவலகங்கள் விவரங்களை அனுப்பவில்லை என்று  கூறப்படுகிறது. இந்த கணக்கு தணிக்கை செய்ய போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டும் இன்னும் ஒத்துழைப்பு தராத அலுவலர்களை தொடக்க கல்வித்துறை  கண்டித்துள்ளது. இருப்பினும் தொடக்க கல்வி அலுவலர்கள் சிலர் இந்த பணியை முடிக்காமல் உள்ளதால் அரசுப் பணிகள் நன்னடத்தை விதியை மீறியுள்ளதாக  தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

அதனால், உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து,  அனைத்து மாவட்டத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளையுடன் கெடு முடிவதால் மேற்கண்ட அலுவலர்கள் மீது  நடவடிக்கை எடுக்கவும் தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு