Skip to main content

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 'குத்துச்சண்டை பயிற்சி'

விருதுநகர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சர்வதேச குத்துச்சண்டை வீரர் பி.ரவிச்சந்திரன் செய்முறை பயிற்சி அளித்தார். குத்து சண்டை, ஸ்குவாஷ், வாள் சண்டை, செஸ், டேக்வாண்டோ, ஜூடோ, கேரம்,
நீச்சல், பீச் வாலிபால் உட்பட பல விளையாட்டுக்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
இதற்கான பயிற்சியை தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களை கொண்டு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில், குத்து சண்டையின் போது கவனிக்க வேண்டியவை, அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற வழி முறை குறித்தும், அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சர்வதேச குத்து சண்டை வீரர் பி. ரவிச்சந்திரன் செய்முறை பயிற்சி வழங்கினார். மூன்று நாள் பயிற்சிக்குப்பின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்று கொடுப்பர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா