Skip to main content

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 'குத்துச்சண்டை பயிற்சி'

விருதுநகர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சர்வதேச குத்துச்சண்டை வீரர் பி.ரவிச்சந்திரன் செய்முறை பயிற்சி அளித்தார். குத்து சண்டை, ஸ்குவாஷ், வாள் சண்டை, செஸ், டேக்வாண்டோ, ஜூடோ, கேரம்,
நீச்சல், பீச் வாலிபால் உட்பட பல விளையாட்டுக்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
இதற்கான பயிற்சியை தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களை கொண்டு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில், குத்து சண்டையின் போது கவனிக்க வேண்டியவை, அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற வழி முறை குறித்தும், அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சர்வதேச குத்து சண்டை வீரர் பி. ரவிச்சந்திரன் செய்முறை பயிற்சி வழங்கினார். மூன்று நாள் பயிற்சிக்குப்பின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்று கொடுப்பர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு