Skip to main content

மாணவரின் கற்றலை திறன் ஒரு ஆசிரியரின் தொழில்திறனை சார்ந்தே இருக்கிறது

மாணவரின் கற்றலை உறுதி செய்யும் திறன் ஒரு ஆசிரியரின் தொழில்திறனை சார்ந்தே இருக்கிறது - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
பள்ளிக் குழந்தைகளை 21ம் நூற்றாண்டு குடிமக்களாக  உருவாக்க உதவும் சிறப்பு வகுப்பறை நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகள்  சென்னையில் நேற்று
தொடங்கியது. மாநில கல்வியியல் மேலாண்மை  மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மேற்கண்ட பயிற்சி மற்றும் மாநாடு  2 நாட்கள் டிபிஐ வளாகத்தில் நடக்கிறது. இதை தொடங்கி வைத்து,  பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:
ஒவ்வொரு  மாணவரின் கற்றலை உறுதி செய்யும் திறன் ஒரு ஆசிரியரின்  தொழில்திறனை சார்ந்தே இருக்கிறது. அது, மிகையாகவோ  குறைவாகவோ இருக்கும் உண்மையை பள்ளிக் கல்வித்துறை  உணர்ந்துள்ளது. ஆசிரியர்களை 21ம் நூற்றாண்டின் கற்றல் தேவைகளை  எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கவே நாடு முழுவதும் தகவல்  தொடர்பு சார் மாநாடுகள், கருத்தரங்குகள், கற்பித்தல் சார்ந்த புதிய  உத்திகளும், தற்போதைய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் சார்ந்த  அறிமுக பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. நல்ல விழுமங்களையும்  அர்ப்பணிப்பு உணர்வுகளையும் வளர்த்தெடுக்கும் இதுபோன்ற மாநாடுகள்  ஆசிரியர்களை 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ப உருவாக்குகின்றன. 

ஆசிரிய கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தொழில் சார்ந்த செயற்பாடுகளை  சக ஆசிரிய சமுதாயத்தோடு பகிர்ந்துகொள்ள ஒரு மேடை அமைத்து  கொடுப் பது இந்த மாநாட்டின் நோக்கம். இந்த மாநாட்டில் ஒவ்வோர்  அறையிலும் ஒரு அமர்வுக்கு குழுத்தலைவர் ஒருவர், வழிகாட்டுவோர்,  ஒருங்கிணைப்பாளர், நிகழ்வுகளை பதிவு செய்வோர், தொழில்நுட்ப  உதவியாளர் என ஒருங்கிணைந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. அமர்வு  ஒன்றுக்கு 13 முதல் 15 ஆய்வுக் கட்டுரைகளை ஆசிரியர்கள்  சமர்ப்பிப்பார்கள். இதன்படி, மொத்தம் 8 அமர்வுகள் நடத்தப்படும்.  ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாநாட்டின்  இறுதியில் சான்றிதழ், ஆய்வுக்கட்டுரையின் சுருக்க தொகுப்பு  வழங்கப்படும், என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு