Skip to main content

சந்தாதாரர்கள் வீடு வாங்க பிஎப் நிறுவனம் உதவ முடிவு


சந்தாதாரர்கள் வீடு வாங்க உதவுவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான திட்டம் வரையறை செய்ய நிபுணர் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) சார்பில் 2 நாள் முன்பு டெல்லியில் ஆலோசனை
கூட்டம் நடந்தது.
இதில், தொழிலாளர் நிதியை பங்குகளில் முதலீடு செய்வது மற்றும் வீட்டுக்கடன் வழங்குவதற்கான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆராய நிபுணர் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், ‘‘பிஎப் நிதியை முதலீடு செய்வதற்கு உள்ள வழிமுறைகளையும், சாத்தியக்கூறுகளையும் விரிவு படுத்துவதற்கு முடிவு செய்துள் ளோம். இதற்காக நிபுணர் குழு அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி நிறுவன சந்தாதாரர்களுக்கு குறைந்த விலை பிரிவிலான வீடுகள் வாங்குவதற்கு உதவுவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. பிஎப் நிதியின் ஒரு பகுதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்லாம் அல்லது வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து, அதன் சந்தாதாரர்கள் வீடு வாங்குவதற்கு உதவ முடியும் என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 
பிஎப் உறுப்பினர்களுக்கு வீடு வாங்குவதற்கு வகை செய்வதற்கான திட்டத்தை வடிவமைப்பது குறித்து தொழிலாளர் பணியாற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், வீட்டு வசதி மேம்படுத்துதல் தொடர்பான நிபுணர்கள் கொண்ட சிறப்பு குழுவிடம் ஒப்படைக்க வருங்கால வைப்பு நிதி வாரியத்தின் அறக்கட்டளை குழு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் ரூ.15,000க்கு கீழ் சம்பளம் வாங்கும் பிஎப் உறுப்பினர்கள் வீடு வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும் என மத்திய பிஎப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்துள்ளார். நிபுணர் குழுவினர் திட்டத்தை வடிவமைத்தல் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து தங்கள் அறிக்கையை இன்னும் 4 மாதங்களில் தர உள்ளனர். இதற்கிடையே, பிஎப் நிறுவனத்தி டம் உள்ள நிதி மூலதனத்தில் 15 சதவீதத்தை குறைந்த விலை வீட்டுக்கடனுக்காக முதலீடு செய்ய பிரதமர் அலுவலம் பரிந்துரைத்துள்ளது.  சொந்த வீடு என்பது சமூக பாதுகாப்பின் ஓர் அம்சமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, தற்போதைய மத்திய அரசு அனைவருக்கும் வீடு என்பதை இலக்காக கொண்டுள்ளது. 

பிஎப் நிறுவனம் சந்தாதாரர்களுக்கு வீட்டுக்கடன் வழங்குவது சாத்தியமில்லை. ஏனெனில், பிஎப் நிறுவனம் இந்த விஷயத்தில் நிபுணத்துவம் கொண்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக எந்த திட்டத்தின் மூலம் சந்தாதாரர்களுக்கு சிறந்த பலன் கிடைக்குமோ அதை செயல்படுத்தலாம் என்று பிஎப் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, பிஎப் நிறுவனம் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக இந்த புதிய திட்டம் நிபுணர் குழுவால் வரையறுக்கப்படும். இதன்மூலம் பிஎப் நிறுவனம் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படலாம். அல்லது வீட்டுக்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது என்ற முடிவும் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு