Skip to main content

FACE BOOK நியூஸ் ஃபீடில் நீங்கள் விரும்புவதை மட்டும் பார்க்க இதை செய்யுங்கள்.!

ஃபேஸ்புக், துவங்கப்படும் போது அதிர்வலைகளை ஏற்படுத்தியது, வளரும் போது தொடர்ந்து பிரபலமாக இருக்கிறது. பதினான்கு ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து ஃபேஸ்புக் அதிர்வலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

பயணத்தின் போது சற்று ஓய்வு எடுக்க நினைத்தால் ஃபேஸ்புக் சென்று நேரத்தை கழிக்கலாம். சில சமயம் ஃபேஸ்புக் செல்லும் போது நியூஸ் ஃபீடில் உங்களுக்கு விருப்பமில்லாத விவரங்கள் உங்களது மன அமைதியை சோதிக்கும் வகையில் இருக்கும். நியூஸ் ஃபீடில் வரும் போஸ்ட்களை கணிக்கவே முடியாது.

நியூஸ் ஃபீடில்
நியூஸ் ஃபீடில் வரும் போஸ்ட்கள் சில சமயம் பிடிக்கும், சில சமயங்களில் பிடிக்காமல் போகலாம், இதற்கு ஃபேஸ்புக் பயன்படுத்தும் வித்தியாச அல்காரிதம்களே முக்கிய காரணம் ஆகும்.

உங்களை எந்நேரமும் மகிழ்ச்சியாக வைத்திருக்க ஃபேஸ்புக் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உங்களுக்கு வரும் போஸ்ட்களின் முக்கியத்துவம் இவ்வாறு தான் கணக்கிடப்படுகிறது.



உங்களது நண்பர்
1) உங்களது நண்பர்களின் போஸ்ட் வாயிலாக உங்களது மற்ற நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உரையாடும் போது

2) உங்களது நண்பரின் போஸ்ட்டில் மற்ற நண்பர்கள் கமென்ட் செய்திருந்தால்

3) உங்களது நண்பர் பகிர்ந்து இருக்கும் செய்தி குறிப்பு அல்லது

உங்களது நண்பர் பகிர்ந்து கொள்ளும் அனைத்து போஸ்ட்களும் உங்களது ஃபீடில் தோன்றுவதற்கான முக்கியத்துவத்தை பெறுகின்றன. இவற்றை மாற்ற நீங்கள் செய்யக் கூடிய சில அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்:


குரூப்கள்:
உங்களது மெனு பாரில் உள்ள டிராப்-டவுன் சென்று மேனேஜ் குரூப்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இனி குரூப்ஸ் ஆப்ஷனில் நீங்கள் சில ஆண்டுகளில் சேர்ந்து இருக்கும் குரூப்களை பார்க்கவும். இதில் சர்ச்சைக்குரிய அல்லது அரசியல் குரூப்கள் உங்களுக்கு விருப்பமற்றதாக தெரிந்தால், பின் கியர் ஐகானை கிளிக் செய்து லீவ் குரூப் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.


பேஜஸ்
அடுத்த நீங்கள் லைக் செய்திருக்கும் ஃபேஸ்புக் பக்கங்களை பார்க்க வேண்டும். இதற்கு ஃபேஸ்புக் ஹோம் பக்கம் சென்று, பேஜஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் இடது புறத்தில் உள்ள நேவிகேஷன் மெனு சென்று லைக்டு பேஜஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இனி முந்தை வழிமுறையை போன்றே பின்பற்ற வேண்டும். பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும். இங்கு நீங்கள் லைக் செய்த அனைத்து பக்கங்களையும் பார்க்க முடியும். இதில் உங்களது ஃபீட் போஸ்ட்களை மாற்றிக் கொள்ளலாம். இங்கு உங்களது விருப்பத்திற்கு ஏற்ப பக்கங்களை லைக் மற்றும் ஃபாலோ ஆப்ஷன்களை பார்க்கலாம். இதில் நீங்கள் விரும்பாத பக்கங்களை அன்லைக் செய்யலாம்.


நியூஸ்ஃபீட்
குரூப்கள் மற்றும் பேஜஸ் ஆப்ஷனை ஆய்வு செய்ததும், நியூஸ் ஃபீட் சென்று உங்களுக்கு விருப்பமில்லாத அம்சங்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். உங்களுக்கு விருப்பமில்லாத போஸ்ட்களை கண்டறிந்தால், போஸ்ட்களில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து ஹைடு போஸ்ட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு