Skip to main content

உலகளவில் தடை செய்யப்பட்டு நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டாப் பொருட்களின் தொகுப்பு!

உலகளவில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டாப் பொருட்களின் தொகுப்பு!

1. விக்ஸ் 

விக்ஸ் தயாரிப்பு உலகின் சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. பல ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த தயாரிப்புகளை உட்கொள்வதால் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளும் அதிகமான பக்கவிளைவுகளும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் நம் நாட்டில் இது பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன.
2. குழந்தை வாக்கர்ஸ் 

கனடா நாட்டில் 2004 ஆம் ஆண்டு முதல் பேபி வாக்கர் தடை செய்யப்பட்டுள்ளது. வாக்கர்ஸ் ஆபத்தானது மட்டுமல்லாமல், மோட்டார் மற்றும் மனநல வளர்ச்சியில் தாமதத்திற்கு பங்களிப்பு செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நீங்கள் அங்கு விற்பனை செய்தால் 100 ஆயிரம் டாலர் அபராதத்திற்கு உட்படுத்தப்படுவீர்கள் அல்லது சிறையில் ஆறு மாதங்கள் உள்ளே தள்ளபடுவீர்கள்.

3. ரெட் புல் 

ரெட் புள் என்ற ஆற்றல் பானம் டென்மார்க் பிரான்ஸ் மற்றும் லித்துவேனியா போன்ற இடங்களில் 18 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இது உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஒன்று. காரணம் இது இதய நோய் அபாயம் அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

4. நீல ஜீன்ஸ் தடை 

வடகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் தடை செய்யப்பட்ட ஒன்று. இதை நீங்கள் அணிந்தால் மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாவீர்கள், காரணம் இது அமெரிக்க நாட்டின் கொடி போல இருப்பதால் இதை அணிய வடகொரியாவில் தடை உள்ளது.

5. பிளாஸ்டிக் பைகள் 

பல நாடுகளில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்ட ஒன்று. முதல் முதலில் இந்த பிளாஸ்டிக் பையை தடைசெய்யப்பட்ட நாடு பங்களாதேஷ், அதன்பின் பிரான்சு, தான்சானியா, சான் பிரான்சிஸ்கோ போன்ற அமெரிக்க நகரங்களில் தடை செய்யப்பட்டது. இது இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட ஒன்றுதான் ஆனாலும் இந்தியாவில் பெரும்பாலான கடைகளில் இது கிடைக்கிறது.

6. ஐபோன் மற்றும் ஐபாட் 

இது எல்லோருக்கும் நிச்சயமாக ஒரு அதிர்ச்சியான செய்தியாக இருக்கும். ஜனவரி 1 2015ஆம் ஆண்டு ரஷ்யர்களுக்கு ஒரு சோகமான நாள் காரணம் அந்த நாட்டில் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட் தடை செய்யப்பட்டது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா