Skip to main content

எலுமிச்சை பழத்தை பறக்கவிட்ட மந்திரவாதிகள் - திடுக்கிட்ட போலீஸ்!

திருப்பதி அருகே கோயில் ஒன்றில் பூஜை நடத்தி புதையல் எடுக்கப்போவதாகக் கூறிய மந்திரவாதிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான இருவரும் எலுமிச்சம்பழத்தை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினருக்கு விளக்கம் காட்டிய
சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடபுரம் கிராமத்தில் குன்று ஒன்றின் மீது மிக பழமையான வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது.

இந்தக் கோயில் மற்றும் கோயிலையொட்டி உள்ள பகுதிகளில் புதையல் இருப்பதாகக் கூறி இரண்டு மந்திரவாதிகள் தலைமையில் பூஜை நடத்தப்பட்டிருக்கிறது. புதையலை எடுப்பதாகக் கூறி அவர்கள் பூஜை செய்துள்ளனர்.

சத்தம் கேட்டு அங்கு சென்ற கிராம மக்கள் மந்திரவாதிகள் இருவரை பிடித்து எர்ரவாரிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் அவர்கள் திருப்பதியை சேர்ந்த பட்டாபிராம் ரெட்டி, ஒம் பிரகாஷ் ராஜ் எனத் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கைது செய்யப்பட்ட மந்திரவாதிகள் இருவரும் காவல்துறையினர் முன்னிலையிலேயே, ஸ்ரீசக்கரம் அமைத்து அதனுள் எலுமிச்சை பழங்களை வைத்து மந்திரங்களை கூறி மையத்தில் வைக்கப்பட்ட எலுமிச்சம்பழத்தை காற்றில் பறக்க வைத்துள்ளனர்.



இதேபோல் வயல் வெளியிலும், வெட்ட வெளியிலும் காவல்துறையினர் முன்னிலையில் மந்திரங்கள் கூறி எலுமிச்சம்பழத்தை காற்றில் பறக்க வைத்து செய்முறை விளக்கம் காண்பித்துள்ளனர்.

தொடர்ந்து இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களோடு தொடர்புடைய மேலும் சிலரையும் தேடி வருகின்றனர். அடிக்கடி இந்தக் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் மர்மமான முறையில் பூஜைகள் நடத்தப்படுவதாகவும் இங்கு வருவதற்கே அச்சமாக உள்ளதென்றும் கூறும் பொதுமக்கள் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு