Skip to main content

எலுமிச்சை பழத்தை பறக்கவிட்ட மந்திரவாதிகள் - திடுக்கிட்ட போலீஸ்!

திருப்பதி அருகே கோயில் ஒன்றில் பூஜை நடத்தி புதையல் எடுக்கப்போவதாகக் கூறிய மந்திரவாதிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான இருவரும் எலுமிச்சம்பழத்தை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினருக்கு விளக்கம் காட்டிய
சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடபுரம் கிராமத்தில் குன்று ஒன்றின் மீது மிக பழமையான வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது.

இந்தக் கோயில் மற்றும் கோயிலையொட்டி உள்ள பகுதிகளில் புதையல் இருப்பதாகக் கூறி இரண்டு மந்திரவாதிகள் தலைமையில் பூஜை நடத்தப்பட்டிருக்கிறது. புதையலை எடுப்பதாகக் கூறி அவர்கள் பூஜை செய்துள்ளனர்.

சத்தம் கேட்டு அங்கு சென்ற கிராம மக்கள் மந்திரவாதிகள் இருவரை பிடித்து எர்ரவாரிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் அவர்கள் திருப்பதியை சேர்ந்த பட்டாபிராம் ரெட்டி, ஒம் பிரகாஷ் ராஜ் எனத் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கைது செய்யப்பட்ட மந்திரவாதிகள் இருவரும் காவல்துறையினர் முன்னிலையிலேயே, ஸ்ரீசக்கரம் அமைத்து அதனுள் எலுமிச்சை பழங்களை வைத்து மந்திரங்களை கூறி மையத்தில் வைக்கப்பட்ட எலுமிச்சம்பழத்தை காற்றில் பறக்க வைத்துள்ளனர்.



இதேபோல் வயல் வெளியிலும், வெட்ட வெளியிலும் காவல்துறையினர் முன்னிலையில் மந்திரங்கள் கூறி எலுமிச்சம்பழத்தை காற்றில் பறக்க வைத்து செய்முறை விளக்கம் காண்பித்துள்ளனர்.

தொடர்ந்து இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களோடு தொடர்புடைய மேலும் சிலரையும் தேடி வருகின்றனர். அடிக்கடி இந்தக் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் மர்மமான முறையில் பூஜைகள் நடத்தப்படுவதாகவும் இங்கு வருவதற்கே அச்சமாக உள்ளதென்றும் கூறும் பொதுமக்கள் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா