Skip to main content

Youtube #hastag - விரைவில் வருகிறது

தற்போது உள்ள சமூக வலைத்தளங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. இதில் வாட்ஸ்அப் என்பது தொலைபேசி நண்பர்களுடன் கலந்துரையாடும் தளமாக உள்ளது.
ஆனால் ஃபேஸ்புக், ட்விட்டர் என்பது பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரும் சங்கமிக்கும் இடமாக இருக்கிறது. இந்த இரண்டு தளங்களிலும் நாம் ஒரு பதிவை வெளியிடும் போது, அதனை எளிதில் நெட்டிசன்கள் பார்க்கும் வகையில் # என்ற குறியீட்டுடன் பதிவிடுகிறோம்.
இந்த # என்பது ஃபேஸ்புக்கை விட, ட்விட்டரில் பிரபலம் வாய்ந்ததாக உள்ளது. ஏனெனில் ட்விட்டரில் அதிக முறை பயன்படுத்தப்படும் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்கும். இதனால் ஏதேனும் ஒரு செய்தி அன்றைய தினத்தில் வைரலானால், அதை # மூலம் நெட்டிசன்கள் பரப்பி ட்ரெண்டிங்காக செய்வனர். இதேபோன்று யுடியூப்பிலும் நாம் # பயன்படுத்தி வீடியோ பதிவை வெளியிட முடியும். ஆனால் இது அனைத்து தரப்பு வீடியோக்களை காண்பிக்கும்.
இந்நிலையில் யுடியூப் நிறுவனமே அதிகாரப்பூர்வாக ஹபர்லிங்க் வசதியுடன் கூடிய ஹேஷ்டேக்குகளை கொண்டுவருகிறது. 

ஒரு வீடியோவில் 15 ஹேஷ்டேக்குகள் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி தேடும், ஒரு சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மட்டுமே திரையில் வரும். உதாரணத்திற்கு ட்விட்டரில் பயன்படுத்தப்படும் ஹேஷ்டேக் போல. இதில் ஆபாச, பாலியல் தொடர்பான, அவதூறு ஹேஷ்டேக்குகளை பயன்படுத்த முடியாது. இது தற்போது சோதனை முறையில் உள்ளது. விரைவில் அனைத்து பயன்பாட்டாளர்களின் உபயோகத்திற்கும் வரும்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு