சென்னை, தமிழகத்தில், மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள, அண்ணா பல்கலை மண்டல வளாகங்களில், தலா, நான்கு இளநிலை பொறியியல் பாடப்பிரிவுகளை துவக்க, முதல்வர் பழனிசாமி உ
த்தரவிட்டுள்ளார். இந்தியாவில், தர வரிசையில், நான்காவது இடத்தில் உள்ள அண்ணா பல்கலையின், சென்னையில் நான்கு வளாகங்களிலும், பிற மாவட்டங்களில் உள்ள, 13 உறுப்புக் கல்லுாரிகளிலும், பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.திருநெல்வேலி, மதுரை, கோவை மண்டல வளாகங்களில், பொறியியல் முதுநிலை பட்டப் படிப்பு மட்டும் நடத்தப்படுகிறது. அந்த மண்டலங்களிலும், 'இளநிலை பட்டப் படிப்புகளை துவக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதை ஏற்று, மூன்று மண்டல வளாகங்களிலும், பொறியியல் முதுநிலை பட்டப் படிப்புகளோடு, நடப்பாண்டு முதல், நான்கு இளநிலை படிப்புகளை துவக்கவும், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 60 மாணவர்களை சேர்க்கவும், முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...
Comments
Post a Comment