Skip to main content

‘நெட்’ தேர்வுக்கு எம்எஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

சிஎஸ்ஐஆர் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிப்பதாவது:

கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் கணிதம் மற்றும் அறி வியல் சம்பந்தப்பட்ட பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் குழு (சிஎஸ்ஐஆர்) நடத்தும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.



அந்த வகையில் இந்த ஆண்டுக் கான முதலாவது தகுதித்தேர்வு ஜூன் மாதம் 19-ம் தேதி நடை பெற உள்ளது. தமிழகத்தில் சென் னையிலும், காரைக்குடியிலும் தேர்வு நடக்கும். கணிதம், இயற்பி யல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் எம்எஸ்சி பட்டம் பெற்றவர்கள் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55% மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு 50% மதிப்பெண் போதுமானது. எம்எஸ்சி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையவர்கள் பிப்ரவரி 29-ம் தேதிக்குள் ஆன்லை னில் (www.csirhrdg.res.in) விண்ணப் பிக்க வேண்டும். ஆன்லைன் விண் ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து போட்டோ ஒட்டி, கையெழுத்திட்டு, தேர்வுக்கட்டணம் மற்றும் தேவை யான இதர ஆவணங்களுடன் மார்ச் 7-ம் தேதிக்குள் டில்லிக்கு அனுப்ப வேண்டும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா