Skip to main content

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி - சி29 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

சென்னை: சிங்கப்பூர் செயற்கைகோள் டெலியோஸ்-1 மற்றும் 5 துணை செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தக பிரிவான “ஆன்ட்ரிக்ஸ்”  வணிக ரீதியாக இதுவரை 22 நாடுகளில் இருந்து 51 செயற்கைகோள்களை விண்வெளி ஆய்வுக்காக அனுப்பியுள்ளது. இந்த வரிசையில் தற்போது சிங்கப்பூரை சேர்ந்த டெலியோஸ்-1 என்ற செயற்கைகோளை பூமியின் மேற்பரப்பு ஆய்வுக்காக இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

இதற்கான 59 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளுடன் வெலாக்ஸ்-சி1, வெலாக்ஸ்-2 என்ற 2 மைக்ரோ செயற்கைகோள்கள் மற்றும் ஏதென்சாட்-1, கென்ட் ரிட்ஜ்-1, காலஸ்ஸியா என்ற 3 நானோ சாட் செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது. 

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு