Skip to main content

செல்பேசி எண், இ-மெயில் முகவரி அளிக்க வாக்காளர்களுக்கு வேண்டுகோள்

செல்பேசி எண், இ-மெயில் முகவரி அளிக்க வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்
செல்பேசி எண், இ-மெயில் முகவரியை இணையதளம், குறுஞ்செய்தி, குரல் பதிவு வசதி மூலம் அளிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக
அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன.இது தொடர்பாக, கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 66 லட்சத்து 81 ஆயிரத்து 842 வாக்காளர்கள் உள்ளனர்.செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 24-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்தன. ‘ஈசி’ எனப்படும் மின்னணு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டு இணையதளம், குறுஞ்செய்தி, குரல்செய்தி வசதி மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டது. பொதுமக்களும் வாக்காளர் பட்டியல்பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்தனர்.


இந்த வகையில் 22 லட்சத்து 81 ஆயிரத்து 392 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 16 லட்சத்து 94 ஆயிரத்து 98 மனுக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் தொகுதிகளுக்கிடையில் இடமாற்றம் தொடர்பாக வந்துள்ளன.மனுக்கள் அளித்தவர்களில் 7 லட்சம் பேர் தங்கள் செல்பேசி எண் மற்றும்இ-மெயில் முகவரி ஆகியவற்றை அளித்தனர். அவர்களுக்கு, விண்ணப்பத்தின் நிலை குறித்த குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.தற்போது, விண்ணப்பிக்கும்போது செல்பேசி எண், இ-மெயில் முகவரி அளிக்காதவர்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே வாக்காளர் அட்டை பெற்றவர்களும், இனி வரும் காலங்களில் வாக்காளர் பட்டியல் தொடர்பான நிலவரங்களை அறிய தங்கள் செல்பேசி, இ-மெயில் முகவரியை அளிக்கலாம்.செல்பேசி எண், இ-மெயில் முகவரியை ஈசி செயலி, இணையதளம், 044-66498949 என்ற குரல் பதிவு சேவை, 1950 என்ற எண்ணிற்கு ‘RMSEpic no’ என்ற முறையில் குறுஞ்செய்தி அனுப்பியும் பதிவு செய்யலாம்.நவம்பர் 8-ம் தேதி முதல், வாக்காளர்களே முன்வந்து தங்கள் செல்பேசி எண், இ-மெயில் முகவரியை அளிப்பது தொடர்பான விழிப்புணர்வு முகாமை நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வாக்காளர்கள் இதன் மூலம், தங்கள் பெயர் இடம் பெற்றுள்ள பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.


மேலும், படிவம் 6,7,8,8ஏ கொடுத்தவர்கள் பெயர் விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, முறையே 9,10.11,11ஏ ஆகிய படிவங்களில், ‘http://104.211.228.47/Apptracking/EmatrixGrid.aspx.’ என்ற இணைய இணைப்பில் வழங்கப்படுகிறது.இதில் ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். மேலும், திருத்தங்கள் இருப்பின் அதற்கான ஆவணங்களை அளிக்கலாம்.வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் நடத்தும் அதிகாரி தவறு இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா