Skip to main content

அரசுத் தேர்வுகளுக்கு இ-சேவை மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்படும் இ-சேவைகளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அரசுப் பணியாளர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திஅ
றிக்கை:


மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவைமையங்கள் மூலம் பிளாஸ்டிக் ஆதார் அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) விண்ணப்பித்தல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தற்போது அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், நகல் பெறுதல்ஆகிய சேவைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி நிரந்தரப் பதிவு செய்ய ரூ.50, தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.30, விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ.5, நகல் பெற ரூ.20 கட்டணமும், நிர்ணயிக்கப்பட்ட தேர்வு கட்டணத்தை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் இந்த சேவை மூலம் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என்றார் ஆட்சியர். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு