Skip to main content

அரசுத் தேர்வுகளுக்கு இ-சேவை மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்படும் இ-சேவைகளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அரசுப் பணியாளர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திஅ
றிக்கை:


மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவைமையங்கள் மூலம் பிளாஸ்டிக் ஆதார் அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) விண்ணப்பித்தல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தற்போது அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், நகல் பெறுதல்ஆகிய சேவைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி நிரந்தரப் பதிவு செய்ய ரூ.50, தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.30, விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ.5, நகல் பெற ரூ.20 கட்டணமும், நிர்ணயிக்கப்பட்ட தேர்வு கட்டணத்தை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் இந்த சேவை மூலம் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என்றார் ஆட்சியர். 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்