Skip to main content

28-ந்தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து அண்ணா பல்கலைக்கழகம்

இன்று முதல் 28-ந்தேதி வரை நடைபெற இருந்த என்ஜினீயரிங் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தேர்வுகள்
அண்ணா பல்கலைக்கழத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் கடந்த 12-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ‘செமஸ்டர்’ தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்
கப்பட்டது. ஆனால் கடந்த 9-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ததால், இந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.இந்தநிலையில், என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வு கால அட்டவணையின்படி, திங்கட்கிழமை (இன்று)முதல் வருகிற 28-ந்தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.ரத்துஇந்த நிலையில் நேற்று சென்னை உள்பட பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதையடுத்து, இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தேர்வுகளை ரத்து செய்து, அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளர் கணேசன் நேற்று அறிவித்தார்.


ரத்து


செய்யப்பட்ட இந்த தேர்வுகள் எந்த தேதியில் நடத்தப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.சென்னை பல்கலைக்கழகம்அதேபோல, சென்னை பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில், 23-ந்தேதி (இன்று) நடைபெறும் தேர்வை மட்டும் ரத்து செய்து, சென்னை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.


சட்டக்கல்லூரி


இந்தநிலையில், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு திங்கட்கிழமை (இன்று)நடைபெற இருந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் வணங்காமுடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் உள்ள சட்டக்கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை (இன்று) தேர்வு நடைபெற இருந்தது. கனமழையின் காரணமாக இந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு