Skip to main content

சூரியனில் 'மெகா' துளை: 'நாசா' கண்டுபிடிப்பு.

அக்டோபர், 10ல், சூரியனின் வளிமண்டலத்தில், மிகப் பெரிய துளை உருவானதை, அமெரிக்காவின் சூரிய கண்காணிப்பு ஆய்வகம் படம் பிடித்திருக்கிறது. பூமியின் சுற்றளவை விட, 50 மடங்கு பெரிதாக இருக்கும் இந்த துளை, தற்காலிகமானதுதான் என்கின்றனர், அமெரிக்க
விண்வெளி அமைப்பான, 'நாசா'வின் விஞ்ஞானிகள்.


சூரியனிலிருந்து, பெருமளவு ஆற்றலும், வாயுக்களும் எப்போதும் வெளியேறியபடியே இருக்கும். இந்த வெளிப்பாடு சற்று குறைவாக இருக்கும் பகுதி, ஒரு பெரிய துளை போலத் தோற்றம் தரும். இந்தப் பகுதியிலிருந்து, மிக வேகமான சூரியக் காற்று வெளிப்பட்டு, பூமியை நோக்கி வரும். இதை, 'பூகோள காந்தப் புயல்' என, வானியல் வல்லுனர்கள் அழைக்கின்றனர்.

இந்தப் புயல், பூமியின் காந்தப் புலத்தோடு மோதும்போது, ஆற்றல் கடத்தப்படுகிறது. இது, 'அரோரா' என்ற அழகிய ஒளி ஜாலத்தை வானில் ஏற்படுத்தும். அக்., 10ல், படம் பிடிக்கப்பட்ட துளையால், நார்வேயில், அருமையான அரோரா காட்சி, வானில் அரங்கேறியது.

சூரியனில் ஏற்படும் காந்தப் புயலால், பூமியில் சில பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக ரேடியோ, ரேடார் மற்றும் ஜி.பி.எஸ்., எனப்படும், இருக்குமிடத்தை அடையாளம் காட்டும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

சூரிய காந்தப் புயல், விலங்குகள் மற்றும் பறவைகளின் திசை அறியும் திறனிலும், தடுமாற்றங்களை உண்டாக்கும். வானில் பறக்கும் புறாக்கள் முதல், கடலின் ஆழத்தில் உள்ள திமிங்கிலங்கள் வரை, அனைத்தும் குழம்பிப்போவதுண்டு. சூரியப் புயலின் போதுதான் திமிங்கிலங்கள் திசைமாறி கடற்கரைக்கு வந்து உயிரை மாய்த்துக் கொள்கின்றன.

இந்த சூரிய காந்தப் புயல், இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால், அடுத்து கனடா, கிரீன்லாந்து, ரஷ்யா மற்றும் ஸ்காண்டினேவிய பகுதிகளில் அரோரா ஒளி ஜாலம் ஏற்படும் என, நாசா கணித்துள்ளது. இந்த வண்ணக் கலவையான அரோராக்களை படம்பிடிக்க, வானியல் புகைப்பட பிரியர்கள் காத்திருக்கின்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு