Skip to main content

பட்டப்படிப்பை முடிக்க யு.ஜி.சி., புதிய கெடு

படிப்பு காலம் தவிர கூடுதலாக, மூன்று ஆண்டுக்குள்   தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ரேங்கிங் வழங்கப்படும்       என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக்குழுவான,  யு.ஜி.சி, அறிவித்துள்ளது.



இளங்கலை மற்றும் முதுகலை உள்ளிட்ட பட்டப்படிப்புகள் படிப்போர், பல காரணங்களால், இடையில் படிப்பை விட்டாலோ, சில பாடங்களில் தேர்ச்சி அடையா விட்டாலோ, ௧௦ ஆண்டுகளுக்குள் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியும். இந்த காலநீட்டிப்பு பல்கலைக்கு பல்கலை, கல்லுாரிக்கு கல்லுாரி மாறுபடும். இந்த நிலையில், யு.ஜி.சி., புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


அதில், இளங்கலை அல்லது முதுகலை படிப்பில், அதற்கான கால அளவுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். முடிக்காதவர்கள், இரண்டு ஆண்டுகளில் முடிக்கலாம். அதையும் தாண்டினால், ஓர் ஆண்டு கூடுதலாக வழங்க முடியும். அதற்கு மேல் கால தாமதம் ஆனால், அந்த பட்டத்துக்கு, ரேங்கிங் வழங்கக் கூடாது என, உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு கல்லுாரி ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. 


அவர்கள் கூறியதாவது:


எப்படியாவது படிக்க வேண்டும் என முயற்சி எடுப்போர் மட்டுமே, தேர்வை இடைவெளி விட்டு எழுதியாவது பட்டம் பெறுவர். அந்த வாய்ப்பு மறுக்கப்படுவோருக்கு இந்த உத்தரவு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா