Skip to main content

பள்ளிகளில் மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது

பள்ளிகளில் மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித்துறை உத்தரவு
        தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் மூடப்பட்ட நிலையில் உள்ளதா என உறுதி செய்யவேண்டும். 



        மழையில் இருந்து காத்துக்கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்ககூடாது எனவும், அதனால் இடி, மின்னல் மூலம் ஆபத்து ஏற்படும் என அறிவுறுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும்.மழைக்காலங்களில் பள்ளிக்கு வரும்போதும், திரும்பிசெல்லும்போதும் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் பாதையை தவிர்க்க வேண்டும். விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிக்கக்கூடாது எனஅறிவுரை வழங்க வேண்டும்.பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்த மின்கம்பங்கள், மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருந்தால் அவைகளை உடனடியாக அகற்ற வேண்டும். 

சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் சுவர்கள், அறிவியல் ஆய்வு கூடங்கள், கணினி அறைகளில் அறுந்து அல்லது துண்டித்த நிலையில் மின்வயர்கள் உள்ளதா என தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும். சுவிட்ச்கள் சரியாக உள்ளதா, மழைநீர் படாத வண்ணம் உள்ளதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக்கூடாது.பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சுவர்கள், வகுப்பறை, கழிவறை மற்றும் சுற்றுச்சுவர் இருப்பின் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கட்டிட பராமரிப்பு பணி மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்லதடை விதிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளி தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்